42 இலட்சம் கிலோ காலாவதியான சீனி பறிமுதல்..களஞ்சியசாலைக்குச் சீல்!
காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று (07.07.2026) அதிரடியாக முற்றுகையிட்டுச் சீல் வைத்துள்ளனர். களனி – பேலியகொட பகுதியில் இருக்கும் இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவரின் பெரிய கிடங்கில் தான் இந்த அநியாயம் நடந்துள்ளது. இதப்பற்றி வலான மத்திய ஊழல் […]