போர் பதற்றத்தால் சிக்கிய ஆயிரக்கணக்கான மாலுமிகள்…!மீட்புக்கு தயாரான சர்வதேச கடல்சார் அமைப்பு.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மீட்கத் தயாராகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் கூறுகையில், ஈரான், ஓமான், அமெரிக்கா மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகளுடன் இணைந்து கடல்சார் தொழில்துறையின் முழு ஒத்துழைப்போடு இந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இந்த மீட்புப் பணிகளைப் […]