ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெரோயினுடன் சிக்கிய நபர்… அதிரடியாக கைது!
விசேட தேடுதலின் போது வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை எந்தரமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் இந்த போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. பிடிபட்ட ஹெரோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 34 வயது மதிக்கத்தக்க இந்த நபரிடம், போதைப்பொருள் கடத்தலின் பின்னணி குறித்து […]