வெளிநாட்டில் இலங்கை இளைஞர் மரணம்; நிர்கதியான மனைவி, குழந்தை
ருமேனியாவில் உணவு விநியோக ஊழியராகப் பணியாற்றி வந்த இலங்கை இளைஞர் ஒருவர், துரதிர்ஷ்டவசமான வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே தனது மனைவியுடன் வாழ்வாதாரத்திற்காக ருமேனியா சென்ற இந்த இளைஞர், அங்குள்ள டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். வெளிநாட்டில் முன்னேற வேண்டும் என்ற கனவோடு சென்றவருக்கு இத்தகைய விபரீதம் நேர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]