தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்
வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரத்திலிருந்து பூந்தோட்டம் திசை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டத்திலிருந்து நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் அவற்றில் பயணித்த இரண்டு பெண்கள் என மொத்தம் […]