யாழில் சேற்றில் புதைந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அச்சுவேலி வல்லைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் வல்லைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சேற்றுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மூவரும் பலத்த […]