கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் நிர்வாகச் சிக்கல்களுக்கு நீண்ட நாட்களாகியும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அந்த வைத்தியசாலையின் […]