எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.
வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ காலநிலையின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் டீன் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதேவேளையில், இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் […]