1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு; விநியோக தகவல் வெளியீடு
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் பதற்றம் காரணமாக, பலரும் அளவுக்கு அதிகமாக எரிபொருளைச் சேமிக்க முயன்றனர். இதன் விளைவாகவே நேற்று காலை சில எரிபொருள் நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்தது. இருப்பினும், நேற்று அதிகாலை முதலே விநியோக நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 6 மணி […]