பாகிஸ்தான் மக்களுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசியபோது, பாகிஸ்தானியர்கள் இலங்கை விசா பெறுவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை நக்வி ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானை விசா கட்டுப்பாடுகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த மாற்றத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக ரீதியாகப் பயணம் செய்பவர்கள் இனி எவ்வித தடையுமின்றி இலங்கை வந்து செல்ல முடியும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் அமைச்சர்களான மோசின் நக்வி, சௌத்ரி சாலிக் ஹுசைன் ஆகியோருக்கு இடையே நடந்த ஆலோசனையின் போதே இந்த அறிவிப்பு வெளியானது.
இலங்கை இக்கட்டான சூழலில் இருந்த போதெல்லாம் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை ஜனாதிபதி இதன்போது நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
இறுதியாக, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை பிரதமர் விரைவில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்வார் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
________________________________________________________________________________________________________________________________
President Anura Kumara Dissanayake has directed officials to remove Pakistan from Sri Lanka’s “negative” visa lists following high-level discussions with Pakistani ministers. This strategic move aims to simplify travel for Pakistani citizens, boost tourism and trade, and reciprocate the historical support Pakistan has provided to Sri Lanka, with a prime ministerial visit to Pakistan planned for the near future.