தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையில் வரும் 12-ம் தேதியிலிருந்து மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான சூழலே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். கடற்பரப்புகளைப் பொறுத்தவரை, நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலையே நிலவும்.
காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக களுத்துறையிலிருந்து கொழும்பு, புத்தளம் வழியாக மன்னார் வரையான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய பகுதிகளில் கடல் அலைகள் மிதமான வேகத்திலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
_____________________________________________________________________________________________________________________________
The Department of Meteorology predicts a potential change in the current dry weather conditions starting February 12th. While dry weather and early morning mist will persist in several provinces for now, coastal areas may experience increased wind speeds up to 50 kmph, leading to occasionally rough seas in specific regions like Mannar and Pottuvil.